Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 மாரியம்மன் கோவில்களில் அம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்

பிப்ரவரி 23, 2024 11:12

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில்  நேற்று கொடியேற்றம் நடந்தது.  தம்மண்ணன்  சாலை, தேவாங்கர் மாரியம்மன் கோவில், 24 மனை மாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில், கோவில் முன்பு நடப்பட்ட கம்பத்திற்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். 

தங்கள் வேண்டுதல் நிறைவேற, பக்தர்களுக்கு கூழ் ஊற்றினார்கள்.    குமாரபாளையம் தம்மண்ணன் வீதி 24 மனை மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மன்  சப்த கன்னிமார்களுடன் ஸ்ரீ கெஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மன், பழங்கள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேவாங்கர் மாரியம்மன், பெரிய மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன்  கோவில்கள், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில்   உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்